சித்தவித்தை

இறைவன், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், பாம்பாட்டி சித்தர், சித்தர் திருமூலர் கருணையால், அருளால் உபதேசிக்கப்பட்ட சித்தவித்தை உபதேசங்கள். சப்தரிஷிகளால் மானிடர்களுக்கு நேரடியாக உபதேசிக்கப்பட்ட கலைதான் சித்தவித்தை. இந்த உபதேசங்களை சித்தவித்தை அப்பியாசிகள் பயன்படுத்திக் கொள்ளவும், பயிற்சி செய்யவும் அனுமதி அளிக்கப்படுகின்றது. ஆனால் மற்றவர்களுக்கு உபதேசமாக வழங்க எவ்வித அனுமதி கொடுக்கப்படவில்லை.

Thursday, 9 June 2016

பாவம், கர்ம வினை

பாவம், கர்ம வினை - நீங்கிட

    மனிதன் பாவத்தை விட்டு விட்டு புண்ணியம் சேர்த்து வருகின்றான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது அந்த பாவத்திலிருந்து அவனுக்கு விமோசனம் கொடுக்கப் பட்டு, புண்ணியம் சேர அவனும் இதே போல் கோள்களில் பிறப்பெடுக்க வாய்ப்புள்ளது.

    யாங்கள் கூறிய நடைமுறையையும், வழிமுறையையும் நீ பின்பற்றி வந்தால் இந்த பிறவியில் நல்ல நிலை கிடைக்குமா இல்லையா? அது இறைவனுக்கு மட்டும்தான் தெரியும். ஆயினும் நிச்சயமாக அக்கோள்களில் பிறப்பு எடுக்க வாய்ப்புண்டு.

     இறைவன் மனிதனிடம் எதிர்பார்ப்பது என்ன தெரியுமா? எவ்வளவு புண்ணியங்கள் அவனிடம் இருக்கிறது. அவனால் பூமிக்கு என்ன நன்மை நடந்துள்ளது என்பதைதான் இறைவன் எதிர் பார்க்கின்றார். யார் எப்படி துன்பப்பட்டாலும், யார் எப்படி கஷ்டப்பட்டாலும் நான் மட்டும் இன்பமாக வாழ வேண்டும். யார் எக்கேடு கெட்டு நாசமாய் போனாலும் தான் மட்டும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று நினைக்கும் மனிதர்களுக்கு நிச்சயமாக மீண்டும் இதே பூமிதான் கொடுக்கப்படும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

    இதையெல்லாம் ரகசியமாக வைத்துக்கொள்ளலாமா என்றால்? இதில் ரகசியம் காக்க வேண்டிய அவசியமில்லையப்பா. ஏனென்றால் இது மனிதர்களுக்கு தெரியாத விஷயம் என்றாலும், நீ கூறினாலும் யாரு நம்பப் போவதில்லை. காரணம் அவர்கள் மன பக்குவம் அவ்வாறு இருக்கிறது. மனிதனின் மன பக்குவம் அவ்வாறு இருக்க காரணம் அவன் செய்த கர்ம வினைகளும், அவன் செய்த பாவ மூட்டைகளும்தான் என்பதை மறந்து விடாதே. பாவங்கள் நீங்க வேண்டுமென்றால் ஸ்தல யாத்திரை மேற்கொள்வது அவசியம். அதிகம், அதிகம், அதிகமாக தான தர்மம் செய்வது அவசியம்.

    ஒரே பிறவியில் ஒருவன் 1008 சிவனாலயங்கள் சென்று விடுவதாக வைத்துக் கொள். நிச்சயமாக அவனுக்கு கைலாயத்திலிருந்து எதாவது ஒரு பதவி நேர் முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ வழங்கப்படும் என்பதை மறவாதே. எனவே நேரம் கிடைக்கும் சமயத்தில் ஸ்தல யாத்திரை என்ற பெயரில் பழங்கால சிவாலயங்களுக்கு நடந்து அல்லது பொது மக்கள் செல்லும் வாகனத்தில்  செல்ல வேண்டும் என்பதை நீ மறந்துவிடாதே. மேலும் தனிப்பட்ட சொகுசு வாகனத்தில் நீ செல்லக்கூடாது என்பது நியதி.

    ஏனென்றால் நீ செல்லும் போது பல இன்பங்களும் பல துன்பங்களும் சந்திப்பாய் அல்லது அந்த வாகனம் கூட விபத்து ஏற்படும். இவையல்லாம் கர்மவினையால் வரக்கூடிய செயல்கள்தான். இல்லை என்றால் உன் பக்கத்தில் அமர்ந்திருப்பவன் உன்னை ஏளனமாக பேசுவான், ஏதாவது ஒரு வகையில் உன்னை துன்புறுந்துவான். இதுவும் இறைவன் செய்யும் திருவிளையாடலே.

       எனவே இவையெல்லாம் பொறுத்துக் கொண்டு 1008 ஸ்தல யாத்திரை சிவனாலயங்கள் முடித்து விட்டால் கைலாயத்திலிருந்து அவன் ஆசிர்வதிக்கப்படுவான் என்பதை மறந்து விடாதே. இதையெல்லாம் மனிதர்களுக்கு கூறுவதற்கு காரணம் என்ன தெரியுமா? மனிதர்கள் இறைவன் தான் முக்கியம் என்பதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

     ஆனால் இன்றைக்கு எந்த மனிதனும் இறைவனை மதிப்பதில்லை. இறைவனின் மார்க்கத்தை பின்பற்றுவதும் இல்லை. பின்பற்றுவதெல்லாம் தனம். தனம் என்கின்ற பணம். பணம் என்கின்ற காசு. காசு என்கின்ற சொத்து. சொத்து என்கின்ற சுகம். சுகம் என்கின்ற இன்பம். இன்பம் என்கின்ற  ராஜபோக வாழ்க்கை. ராஜபோக வாழ்க்கை என்கின்ற பதவி. பதவி என்கின்ற புகழ். நான் என்கின்ற அகம்பாவம்.

       நான் என்கின்ற அகந்தை. நான் என்கின்ற ஆணவம். இதையெல்லாம் வைத்துக் கொண்டு வாழ்வதால் தான் மனதிற்கு, ஆழ்மனதிற்கு, எண்ணத்திற்கு, கண்களுக்கு, ஐம்புலன்களுக்கு இறைவனின் அருமை தெரியாமல் போகிறது.
     
       இறைவனின் அருமையை மனிதர்கள் புரிந்து கொண்டால் அவர்கள் இறைவனின் சொல் கேட்டு, பேச்சைக் கேட்டு நடப்பார்கள். இறைவனின் வழியில் செல்வோம் என்று நினைப்பார்கள். இதனால் அவர்களின் கர்மவினை குறைய ஆரம்பிக்கும்.

2 comments:

  1. http://www.vikatan.com/news/tamilnadu/65418-shock-reasons-behind-death-of-eleephant-maharaj.art

    sir what would be siddhar's punishment to such atrocities. Is this happening as per god's will or solely an act of foolish mankind.

    It's giving a feel that siddhar's and god remaining a silent spectator to all these sins.

    Will there be a retribution or a backlash against all the humans who are at fault. Especially against politicians and corporate goons.

    ReplyDelete